முல்லைப்பெரியாறு அநீதியும் ..முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்!!

                                      முல்லைப்பெரியாறு அநீதியும் 
                     முதுகெலும்பில்லாத தமிழ்நாடும்!!


முல்லை பெரியார் அணை !!!
அணையை உடைப்பேன் என்று சவால் விடுவதையும் பார்த்தால் இந்த முட்டாப்பயலுக 100% கல்வியறிவு கொண்டவர்கள் என்பதை நம்ப முடியவில்லை. கேராளாவில் இருக்கும் தமிழர்களைவிட தமிழகத்தில் இருக்கும் மலையாளிகள் எண்ணிக்கையில் பெரும்பகுதி அதிகம். சாதாரண தேநீர் கடையில் ஆரம்பித்து தங்கம், நிதி என அவர்களின் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான். ஆனால் இந்த சொரணை கெட்ட தமிழனுக்கு எப்போதும் புத்திவராது என்பது அவர்களுக்கு தெரியும் போல. அதனால்தான் அவ்வளவு தைரியமாக சாதாரண அப்பாவி தமிழர்களை அவர்கள் தாக்குகின்றனர்..
தமிழகத்தில் நம்மை நம்பிருக்கும் மலையாளிகளை நாம் இப்போதும் அரவணைப்பது நமது பெருந்தன்மை. இப்போதுவரை நாம் அவர்களுக்கு நல்ல மரியாதையும், வியாபார வாய்ப்புகளும் தந்தவண்ணம்தான் இருக்கிறோம். ஆனால் மலையாளிகளின் கீழ்த்தரமான அடாவடிகள் அதிகரித்தால் இது தொடருமா? என்பது சந்தேகமே...
1800ஆம் ஆண்டு தொடக்கம்.பருவ மழை பொய்த்து..தமிழகத்தில் வறட்சி.இதை ஆங்கில அரசு ஆய்வு செய்தது.நீர் ஆதாரங்களைப் பெருக்க எண்ணியது.கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பல ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி கடலில் கலப்பது கண்டறியப்பட்டது.அப்பகுதியில் அணையைக் கட்டி தண்ணீரை தமிழகத்தில் திருப்புவதன் மூலம் தேனி,மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை,ராமனாதபுரம் மாவட்டங்களில் வறட்சியை விரட்டலாம் என ஆங்கில அரசு முடிவெடுத்தது.
27 ஆண்டுகள் கழித்து திட்ட அறிக்கை தயாரானது.பின்னரும் 23 ஆண்டுகள் கழித்து முல்லை பெரியாறுக்கு இடையே அணை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.பென்னிகுக் என்னும் ஆங்கில பொறியாளர் 1874ல் அணை கட்டும் பொறுப்பை ஏற்றார்.ஆண்டுக்கு 4290 மி.மீ மழை பெய்யும் அடர்ந்த வனப்பகுதியில், கடும் குளிரில் வன விலங்குகள் நிறைந்த இடத்தில்..பல இன்னல்கள்,உயிர் இழப்புகள் இடையே கட்டுமானப்பணி துவங்கியது.இந்நிலையில் 1890 ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அணையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.அப்போது ஆங்கில அரசு..இதற்கு மேல் பணம் செலவிட முடியாது என அணை கட்டும் பணியை நிறுத்தச் சொன்னது.ஆனால் பல இழப்புகள் இடையே நடைபெற்ற பணியை பாதியில் நிறுத்த விரும்பவில்லை.உடன் இங்கிலாந்தில் இருந்த தனது மற்றும் மனைவியுடையதுமான சொத்துகளை விற்று பெர்ந்தொகையைத் திரட்டி அணையைக் கட்டி முடித்தார்.சுட்ட செங்கள்,இஞ்சி,கடுக்காய்,கருப்பட்டி, தேக்கு மரப்பட்டை என்னும் பொருள்களால் அணை கட்டப்பட்டது.165 அடி உயரமுள்ள அணையின் நீளம் 1241 அடி.நீர்த்தேக்க உயரம் 155 அடியாக உயர்த்தப்பட்டு..அலைகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக 152 அடியாக உறுதி செய்யப்பட்டது.அணையில் எப்போதும் 104 அடி தண்ணீர் தேங்கியிருக்க வேண்டும்.அதற்கு மேல்..அதாவது 48 அடி தண்ணீர் தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.(தமிழகத்திற்கு 8080 மில்லியன் கன அடி. )இதன் மூலம் இரண்டு லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்றது.கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் பயன் பெற்றனர்..பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் முதல் 999 ஆண்டுகளுக்கு தமிழகம் அணையை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம்..இந்திய கவுன்சில் செக்ரட்டரியேட்டும்..திருவாங்கூர் சமஸ்தானமிடையே கையெழுத்தானது.
ஒப்பந்தபடி தமிழகம் நீர் பாசனம்,மின் உற்பத்திக்கான செயல்பாடுகளை செய்து கொள்ளலாம்.போக்குவரத்தின் முழு உரிமையும் தமிழகத்திற்கு சொந்தம்.மேலும் நீர் பிடிப்புப் பகுதிக்கான 597.77 சதுர கிலோமீட்டருக்கு 40000 ரூபாயை ஆண்டொன்றிற்கு கேரளாவிற்கு தமிழகம் கொடுத்து வந்துள்ளது.1960 ஆம் ஆண்டிலிருந்து இத் தொகை 2 லட்சத்து 57 ஆயிரமாக ஆகி உள்ளது.1975 ஆம் ஆண்டு 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையை கேரளா கட்டியது.இடுக்கி அணைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் அதன் கவனம் முல்லை பெரியாறு பக்கம் திரும்ப..பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும்..நீர்க்கசிவு என்றும்..அணை உடைந்தால் மூன்று மாவட்டங்கள் அழிந்துவிடும் என்றும் பிரச்னை துவக்கப்பட்டது.1945 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அணை பலப்படுத்தப் பட்டுள்ளது.கடந்த ஒரு நூற்றாண்டில் 30 முறை நில அதிர்வு ஏற்பட்டது.3.7 ரிக்டர் அளவே..ஆனால் அணையில் விரிசலோ, கசிவோ இல்லை.அப்படியே அவர்களின் கூற்றுபடி..அணை உடைந்தாலும்..அணையிலிருந்து 15 டிஎம்சி தண்ணீரே வெளியேறும்.அது காட்டுப்பாதை வழியாக இடுக்கிக்கு சென்றுவிடும்..70 டிஎம்சி கொள்ளளவு உள்ள இடுக்கி அணை இந் நீரை ஏற்றுக்கொள்ளும்.ஆகவே எந்த பாதிப்பும் இல்லை.இதைவிட நகைச்சுவையான வாதம்..அணை உடைந்தால் மூன்று மாவட்டங்கள் மூழ்கிவிடும் என்பதும்..பெரியாறு அணையின் கடல்மட்ட உயரம் 2869 அடி.நீரில் மூழ்கிவிடும் என்று சொல்லப்படும் இடங்கள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிகளுக்குக்கு மேல் உயரத்தில் உள்ளவை.தண்ணீர் எதிர்திசையில் அல்லது மேல் நோக்கி சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இயற்பியலுக்கும்,அறிவியலுக்கும் முரணான வாதம்.152 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கலாம் என தமிழக, கேரள அதிகாரிகளும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தும்..கேரள அரசு அதை ஏற்கவில்லை.இதனால் தமிழகத்திற்கு கடந்த 25 ஆண்டுகளில் 3000 கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.


அணைகளில் நீர்க் கசிவு அனுமதிக்கப்பட்ட ஒன்று தான், அணையில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்திட இது பெரிதும் உதவுகிறது. அணைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீர்க் கசிவு, நிமிடத்துக்கு 250 லிட்டர். முல்லை பெரியாறு அணையில், நிமிடத்துக்கு 45 லிட்டர் நீர்க் கசிவு தான் ஏற்படுகிறது. இது, அனுமதிக்கப்பட்ட நீர்க் கசிவு அளவில் ஐந்தில் ஒரு பகுதி.
முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கினால் கொள்ளளவு 10.5 டி.எம்.சி., 155 அடி வரையும் நீரைத் தேக்கலாம். கேரள அரசு சொல்வது போல், முல்லை பெரியாறு அணை உடைந்தால், இந்த தண்ணீர், அணையை ஒட்டியுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து, 58 கி.மீ., சென்று, கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையில் விழும்.
இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டி.எம்.சி., முல்லை பெரியாறு அணையை விட ஏழு மடங்கு பெரியது. அணை இடிந்து வெளியேறும் தண்ணீரால் கேரள மாவட்டங்களில் பேரழிவு ஏற்படும் என்பதும் கற்பனையே. பாதிப்பு தமிழகத்துக்கே...முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடிக்கு குறைத்ததால், 1979ம் ஆண்டிலிருந்து தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்புகள்:1. தரிசாக மாறிய நிலப்பரப்பு 38 ஆயிரம் ஏக்கர்.2. இரு போக சாகுபடியாக இருந்து ஒரு போக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 26 ஆயிரம் ஏக்கர்.3. ஆற்று நீர் குபடியிலிருந்து நீர் வரத்து இல்லாமையால், ஆழ்குழாய் சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர்.4. விவசாய உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்.5. மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 531 கோடி ரூபாய்.இதுகுறித்து, தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் வீரப்பன் கூறியதாவது:
“முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 10.5 டி.எம்.சி., தண்ணீர் இருக்கும்போது, உடையும் நிலை ஏற்பட்டால், தண்ணீர் முழுவதும், அணையை ஒட்டியுள்ள மிக ஆழமான பள்ளத்தில் தான் விழும். அங்கு எந்த சமவெளிப் பகுதியும் இல்லை.கேரளத்தின் குடியிருப்புப் பகுதிகள் முல்லைப் பெரியாறு அணைக்கு மேல் தான் உள்ளது. அதாவது, கடல் மட்டத்திலிருந்து அணையின் உயரம் 2,864 அடி. கேரளத்தின் குமுளி (3,100), வண்டிப் பெரியாறு (2,743), பாம்பனார் (4,402), எலப்பாறை (3,648), வல்லாரம் குன்னு (3,422), புல்மேடு (3,583) ஆகியன முல்லை பெரியாறு அணையை விட உயரமான பகுதியில் தான் உள்ளன. எனவே, முல்லைப் பெரியாறு அணையின் நீர், இவற்றுக்குள் செல்லாது.மேலும், அணை உடைந்து வழிந்தோடும் நீர், 50 கி.மீ., தூரம் சென்று, கேரளம் கட்டியுள்ள இடுக்கி அணைக்குத் தான் செல்லும். இது, முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு அதிகம்.
அதாவது, 70.5 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும் நிலையில் உள்ளது. எனவே, கேரள அரசு சொல்லுவது போல, முல்லைப் பெரியாறு அணை உடைவதால் கேரளத்தில் உள்ள எந்தப் பகுதியும் பாதிக்காது” இவ்வாறு அவர் கூறினார்.
தங்கள் பக்கம் நியாயம் இல்லை - ஏற்கெனவே வந்த தீர்ப்புகள் மறுபடியும் வந்துகொண்டிருக்கும் என்பதை உணர்ந்த நிலையில், வன்முறையில் இறங் கும் ஒரு வேலையில் கேரளா இறங்கியுள்ளது. இதற் குக் கேரள மாநில அரசும் பின்னணியில் உள்ளது. இதன் மூலமாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அமைந்துள்ள குழுவையும் மிரட்டுகின்ற யுக்தியைக் கையாளுகின்றார்கள்.
இன்னும் எத்தனை கன்னங்கள் உள்ளன உன்னிடம் தமிழா? உன்னை அடிப்பவரிடம் காண்பிபதற்க்கு..!
அன்று காவிரி... இன்று முல்லைப்பெரியாறு... நாளை??? வெறென்னவாய் இருக்கமுடியும்?.. கண்டிப்பாய் பாலாறுதான்..

Share on :

0 comments:

Post a Comment

 
© Copyright Puthiya Seithigal 2011 - Some rights reserved | Powered by Blogger.com.
Template Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates and Theme4all